Friday, November 27, 2009

உன் பெயரை




கடற்கரை மணலில்

ஆசையாய் கிறுக்கும்

குழந்தையோடு குழந்தையாக

நானும் கிறுக்க ஆசைபடுகிறேன்....

உன் பெயரை

நீ காயப்பட்டாய்


எத்தணை முறை
என் இதயம் எரிந்தது என்று
தெரியாது.......

காயத்தின் வலி தீர
எத்தணை முறை
நீ காயப்பட்டாய் என்று தெரியும்

காதல் சுவை


ஒவ்வொரு காலையும்

உன் காதோடு

காதல் சொல்லி எழ வேண்டும்.

இந்த இனிமையான நிகழ்வு வேண்டும்....

இனிப்பான காதல் சுவை பருக வேண்டும்.....

உன்னோடு என்றும் வாழ வேண்டும்.........

உன் கண்கள்!!!!!!!!!


பூசிக்கொள்ளாமல் சிவக்கும்

என் கன்னங்களுக்கு

காரணம்

உன் பார்வை

மருதாணியாய் ஆனதாலா?

என் வெட்கங்களை

அழகாய் படம் எடுக்கிறது

உன் கண்கள்!!!!!!!!!

என்ன செய்வேன் நான்.....

கையருகே மாலையாக நீ



மொட்டுக்களாய் நீ இருக்க.........
தினமும் காதல் நூல் கொண்டு
தொடுக்கிறேன் பூ மாலையாக.....
கையருகே மாலையாக நீ........
சூடிக்கொள்ளும் பாக்கியம் இல்லாமல் நான்

நீ சூட்டியது


கனவாகவே
கலைந்து போகுமோ?

கல்யாண மாலையை
நீ சூட்டியது......

என் கவியை அழகாக்க.


தமிழ் அகரதியை
புரட்டிப் பார்த்தேன்......
இன்னும் என் கவியை அழகாக்க.....
தேடி தேடி கண்டுபித்த வார்ததை இது.........
பிரவின்குமார்........